sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நீர்நிலைகளில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

/

நீர்நிலைகளில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

நீர்நிலைகளில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

நீர்நிலைகளில் மூழ்கி இருவர் உயிரிழப்பு


ADDED : பிப் 03, 2025 11:50 PM

Google News

ADDED : பிப் 03, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டைபெரியபாளையத்தை அடுத்த, கொசவன்பேட்டை, அஞ்சாத்தம்மன் கோவிலை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 51; நேற்று முன்தினம் மதியம் முதல் இவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டின் அருகில் இருந்த குளத்தில் சடலமாக கிடந்தார். பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிறுவன் பலி


சென்னை, பாடியைச் சேர்ந்தவர் சுரேஷ், 41. நேற்று முன்தினம் மதியம், குடும்பத்துடன் மாளந்துார் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டனர். மாலையில் இருந்து, இவரது மகன் ஜனார்த்தனத்தை, 15, காணவில்லை.

அருகில் உள்ள ஆரணி ஆற்றிற்கு சென்றதாக சிலர் கூறினர். அங்கு சென்று பார்த்தபோது, ஆற்றில் விழுந்து கிடந்த சிறுவனை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இரு சம்பவங்கள் குறித்தும், பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us