/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமி பலாத்கார வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை
/
சிறுமி பலாத்கார வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : பிப் 17, 2024 01:45 AM

செங்கல்பட்டு:ஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, பெற்றோரை இழந்து, அவரது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹரி, 28, கங்காதரன், 21, ஆகியோர், சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதில் கர்ப்பமான சிறுமிக்கு, 2021 டிச., 10ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து, வழக்கு பதிந்த காஞ்சி புரம் அனைத்து மகளிர் போலீசார், இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி தமிழரசி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிந்து குற்றம் நிருபிக்கப்பட்டதால், ஹரி, கங்காதரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கட்டத் தவறினால், ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி தமிழரசி நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின், இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மரபணு பரிசோதனையில், சிறுமியின் குழந்தைக்கு தந்தை ஹரி என தெரியவந்தது.