நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மறைமலைநகர் அடுத்த அருந்ததியர்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 35; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் தன் 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார்.
நேற்று மீண்டும் வந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து, வினோத்குமார் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.