/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டூ - வீலர்கள் மோதல்: மாணவர் பலி
/
டூ - வீலர்கள் மோதல்: மாணவர் பலி
ADDED : மார் 17, 2024 01:56 AM
மறைமலை நகர்:சென்னை அரும்பாக்கம் அசோக் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் அபிஷேக் ஆனந்த், 22. காட்டாங்கொளத்துாரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று முன்தினம் இரவு அபிஷேக், தன் 'கே.டி.எம்., டியூக்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்
பொத்தேரி சர்வீஸ் சாலையில் சென்றபோது, எதிரே வந்த 'ராயல் என்பீல்டு' இருசக்கர வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த அபிஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்த விசாரிக்கின்றனர்.

