sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேன் - பைக் மோதல் வாலிபர்கள் இருவர் பலி

/

வேன் - பைக் மோதல் வாலிபர்கள் இருவர் பலி

வேன் - பைக் மோதல் வாலிபர்கள் இருவர் பலி

வேன் - பைக் மோதல் வாலிபர்கள் இருவர் பலி


ADDED : அக் 31, 2025 11:42 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்: வேன் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி, இரண்டு வாலிபர்கள் இறந்தனர்.

செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கேசரிசாய் மனோஜ் ரெட்டி, 26, என்பவர், இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

அதே நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக, செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ், 26, என்பவர் பணிபுரிந்து வந்தார்.

பழைய கார் வாங்குவது தொடர்பாக, நேற்று முன்தினம் இவர்கள் இருவரும், 'பேஷன் புரோ' பைக்கில் திருக்கழுக்குன்றம் சென்றனர். பின், அங்கிருந்து செங்கல்பட்டு திரும்பினர். அப்போது, இரவு 11:30 மணியளவில், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஒரகடம் கிராம கூட்ரோடு பகுதியில், எதிரே வந்த தனியார் நிறுவன 'டெம்போ போர்ஸ்' வேனும், இவர்களது பைக்கும் நேருக்கு நேர் மோதின. இதில், இவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

தகவலின்படி வந்த திருக்கழுக்குன்றம் போலீசார், இவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us