sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

எரியாத மின் விளக்குகள் பகுதி மக்கள் அச்சம்

/

எரியாத மின் விளக்குகள் பகுதி மக்கள் அச்சம்

எரியாத மின் விளக்குகள் பகுதி மக்கள் அச்சம்

எரியாத மின் விளக்குகள் பகுதி மக்கள் அச்சம்


ADDED : செப் 08, 2025 12:25 AM

Google News

ADDED : செப் 08, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகில் தெள்ளிமேடு சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் மக்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிங்கபெருமாள் கோவில் பாலுார் சாலை 10 கி.மீ., நீளமுடையது. இந்த சாலையை தெள்ளிமேடு, கொளத்தூர், வெங்கிடாபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையில் தெள்ளிமேடு பேருந்து நிறுத்தம் அருகில் மறைமலை நகர் நகராட்சி எல்லையில் கடந்த 2015ம் ஆண்டு நகராட்சி சார்பில் மக்கள் கோரிக்கையை ஏற்று உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அச்சமின்றி சென்று வந்தனர்.

இந்த உயர் கோபுர மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாததால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பணி முடிந்து இரவு வேலைக்கு செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த உயர் கோபுர மின் விளக்குகளை பழுது நீக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us