/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவிந்தாபுரம் சாலையில் எரியாத மின் விளக்குகள்
/
கோவிந்தாபுரம் சாலையில் எரியாத மின் விளக்குகள்
ADDED : ஜூலை 27, 2025 12:20 AM

மறைமலை நகர்:கூடலுார் -- கோவிந்தாபுரம் சாலையில் மின் விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மறைமலை நகர் நகராட்சி, கூடலுார் - - கோவிந்தாபுரம் சாலை 5 கி.மீ., உடையது. மட்டாண ஓடை, கோவிந்தாபுரம், கருநிலம் உள்ளிட்ட கிராம மக்கள் மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை ஓரம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே மின் விளக்குகளை சீரமைத்து, இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.