sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மீண்டும் அமைக்கப்படாத நிழற்குடை சாலை ஆக்கிரமிப்பால் திணறல்

/

மீண்டும் அமைக்கப்படாத நிழற்குடை சாலை ஆக்கிரமிப்பால் திணறல்

மீண்டும் அமைக்கப்படாத நிழற்குடை சாலை ஆக்கிரமிப்பால் திணறல்

மீண்டும் அமைக்கப்படாத நிழற்குடை சாலை ஆக்கிரமிப்பால் திணறல்


ADDED : ஜன 27, 2025 11:20 PM

Google News

ADDED : ஜன 27, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுப்பட்டினம், புதுப்பட்டினத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட நவீன பயணியர் நிழற்குடைகளை மீண்டும் அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

அணுசக்தி துறை கல்பாக்கம், புதுப்பட்டினம் ஊராட்சியுடன் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.

சென்னை - புதுச்சேரி உள்ளிட்ட தட அரசு பேருந்துகள் புதுப்பட்டினம், பழைய கிழக்கு கடற்கரை சாலையில் நின்று, பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், நிழற்குடையின்றி வெயில், மழையில் அவதிப்பட்டனர்.

இதையடுத்து, சென்னை அணுமின் நிலைய நிர்வாகம், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு நவீன நிழற்குடைகளை, கடந்த 2013ல் அமைத்தது.

கடந்த 2015ல், சாலை மையத்தடுப்புடன் விரிவாக்கப்பட்ட போது, அணுமின் நிலைய நிர்வாகம் நிழற்குடைகளை அகற்றி, அதன் வசமே பாதுகாப்பாக வைத்தது.

சாலை விரிவாக்கம் முடிந்து, நிழற்குடைகளை மீண்டும் அமைக்க முயற்சிக்கப்பட்டது.

ஆனால், சாலை பகுதியை ஆக்கிரமித்துள்ள கடைக்காரர்கள், இதற்கு இடையூறாக உள்ளதாக கூறப்படுகிறது. பலமுறை முயன்றும், கடந்த 10 ஆண்டுகளாக மீண்டும் பயணியர் நிழற்குடைகளை அமைக்க முடியாமல், இழுபறி நீடிக்கிறது.

இதனால், பேருந்து பயணியர் திறந்தவெளியில் அவதிப்படுகின்றனர்.

எனவே, வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அந்த இடத்தில் மீண்டும் பயணியர் நிழற்குடை அமைக்கவும், பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us