sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சூணாம்பேடு ஆரவல்லி நகரில் வடிகால் அமைக்க வலியுறுத்தல்

/

சூணாம்பேடு ஆரவல்லி நகரில் வடிகால் அமைக்க வலியுறுத்தல்

சூணாம்பேடு ஆரவல்லி நகரில் வடிகால் அமைக்க வலியுறுத்தல்

சூணாம்பேடு ஆரவல்லி நகரில் வடிகால் அமைக்க வலியுறுத்தல்


ADDED : அக் 18, 2024 07:49 PM

Google News

ADDED : அக் 18, 2024 07:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆரவல்லி நகர் பகுதியில், 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் கால்வாய் வசதி இல்லாததால், மழைக்காலத்தில் குடியிருப்புப் பகுதி மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், சாலையில் பெருக்கெடுத்து, மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு சாலை மற்றும் சூணாம்பேடு - தொழுப்பேடு சாலைகளில் தேங்குகிறது.

மேலும், சாலை முழுதும் சேறும், சகதியுமாக மாறி, போக்குவரத்து பாதிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக சிரமப்படுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆரவல்லி நகர் பகுதியில், சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us