/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெருக்கரணை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
/
பெருக்கரணை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 11, 2025 01:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பெருக்கரணை ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து புதுார் வழியாக பெருக்கரணை காலனி பகுதிக்கு செல்லும் தார் சாலை உள்ளது.
சாலை பழுதடைந்து ஜல்லிகள் பெயர்ந்து உள்ளதால், தினசரி சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் சிரமப்படுகின்றனர்.
ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பெருக்கரணை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்கின்றனர்.