ADDED : டிச 01, 2024 08:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,:வண்டலுார் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான் உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.
'பெஞ்சல்' புயல் எச்சரிக்கையை அடுத்து, பாதுகாப்பு கருதி கடந்த 29 மற்றும் 30ம் தேதி பூங்கா மூடப்பட்டது. புயல் 30ம் தேதி நள்ளிரவு கரையை கடந்ததையடுத்து, இன்று பூங்கா திறக்கப்படுகிறது.
வழக்கமாக, வாரந்தோறும் செவ்வாய்கிழமை துாய்மை பணிகளுக்காக பூங்காவிற்கு வார விடுப்பு அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், வார விடுப்பு நாளிலும் பூங்கா திறக்கப்படும் என நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.