sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வடிகால், சாலை வசதி வேண்டி போராடும் வண்டலுார் மக்கள்

/

வடிகால், சாலை வசதி வேண்டி போராடும் வண்டலுார் மக்கள்

வடிகால், சாலை வசதி வேண்டி போராடும் வண்டலுார் மக்கள்

வடிகால், சாலை வசதி வேண்டி போராடும் வண்டலுார் மக்கள்


ADDED : மார் 16, 2025 01:58 AM

Google News

ADDED : மார் 16, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்டலூர்:வண்டலுார், சிங்காரத்தோட்டம், மூகாம்பிகை கோவில் தெருவில், 15 ஆண்டுகளாக சாலை, வடிகால் வசதி வேண்டி, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 4வது வார்டுக்கு உட்பட்ட மூகாம்பிகை கோவில், மசூதி, ஈ.வே.ரா., ஆகிய தெருக்களில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கின்றனர்.

இத்தெருக்களில், கடந்த 15 ஆண்டுகளாக சாலை மற்றும் வடிகால் வசதி இல்லை. இது குறித்து பகுதிவாசிகள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

பகுதிவாசிகள் கூறியதாவது:

மூகாம்பிகை கோவில் தெரு நுழைவு பகுதியில், 14 வீடுகளை, தனிநபர் வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால், உரிய வசதி செய்து தராததால், இந்த வீடுகளிருந்து வெளியேறும் கழிவு நீர், தெருவில் வழிந்தோடி, அருகிலுள்ள மசூதி தெருவில், காலி இடத்தில் தேங்கி, கொசு உற்பத்தி மிகுதியாகி, சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

சாலை மற்றும் வடிகால் வசதி செய்து தரும்படி, கடந்த 15 ஆண்டுகளாக, ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, சாலை மற்றும் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us