sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேதகிரீஸ்வரர் கோவில் 'ரோப் கார்' திட்டம்... 'டெண்டர்!':ரூ.19.5 கோடியில் செயல்படுத்த முடிவு

/

வேதகிரீஸ்வரர் கோவில் 'ரோப் கார்' திட்டம்... 'டெண்டர்!':ரூ.19.5 கோடியில் செயல்படுத்த முடிவு

வேதகிரீஸ்வரர் கோவில் 'ரோப் கார்' திட்டம்... 'டெண்டர்!':ரூ.19.5 கோடியில் செயல்படுத்த முடிவு

வேதகிரீஸ்வரர் கோவில் 'ரோப் கார்' திட்டம்... 'டெண்டர்!':ரூ.19.5 கோடியில் செயல்படுத்த முடிவு


ADDED : மார் 02, 2024 10:19 PM

Google News

ADDED : மார் 02, 2024 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் செயல்படுத்தப்படும், 'ரோப்' கார் திட்டத்திற்கானவடிவமைப்பு தொழில்நுடபம் மற்றும் இயக்கத்திற்காக, ஒப்பந்த நிறுவனங்களை வரவேற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, மூலவர் சன்னிதியில், சுவாமியின் பின்புற சுவரில், சோமாஸ்கந்தர், பிரம்மா, திருமால் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர்.

வடபுற சுவரில் யோகதட்சிணாமூர்த்தி, தென்புற சுவரில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரர், புடைப்புச் சிற்பங்களாக வீற்றிருக்கின்றனர்.

மேலும், இந்திரன், குன்றில் இடியாக விழுந்து வழிபட்ட அடையாள லிங்க சின்னம் காணப்படுகிறது. கோவிலை மகேந்திரவர்ம பல்லவன் அமைத்துள்ளார்.

சுவாமியின் பிரதான அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன், இக்கோவிலின் தென்மேற்கில், நிலத்தில் உள்ள பக்தவச்சலேஸ்வரருடன் வீற்றுள்ளார்.

சமய குரவர்கள் நால்வரான அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர், சுவாமியை போற்றிப் பாடியுள்ளனர். தலா 10 நாட்கள், சித்திரை பெருவிழா, ஆடிப்பூரம் என, முக்கிய உற்சவங்கள் நடக்கின்றன.

மலைக்குன்றுகள் சில கி.மீ., சுற்றளவில் விரிந்துள்ளன. நோய் தீர்க்கும் மூலிகை தாவரங்கள் நிறைந்துள்ளன. பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இக்கோவில் சென்னை அருகில் உள்ள நிலையில், திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்ல இயலாத பக்தர்கள், இங்கு திரள்கின்றனர்.

கோவில், 300 அடி உயர குன்றில் மீது அமைந்துள்ளதால், அங்கு செல்ல, 560 படிகளில் ஏறி செல்ல வேண்டும்.

முதியோர், பெண்கள், சிறுவர், படியில் ஏறிச் செல்ல இயலாமல் சிரமப்படுகின்றனர்.

கோவில் ஊழியர்கள், கோவிலுக்கு சென்று திரும்ப தாமதமாகிறது. அங்கு பாதுகாப்பிற்கு கண்காணிப்பதும் சிக்கலாக உள்ளது. எனவே, பக்தர்கள் வசதிக்காக, குன்று பகுதியில் வாகன பாதை அமைக்க அல்லது 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

உச்சிப்பகுதி குறுகியதாக இருப்பதால், 'ரோப் கார்' இயக்குவது குறித்து, துவக்கத்தில் அறநிலையத் துறை நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை. வாகன பாதை அமைக்கவே, சில ஆண்டுகளுக்கு முன் பரிசீலிக்கப்பட்டது.

தி.மு.க., அரசு ஆட்சி பொறுப்பேற்றதும், 'ரோப் கார்' இயக்குவதாக, துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவித்தார்.

அரசின், 'இட்காட்' நிறுவனம், 11.97 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆய்வு செய்து, திட்டத்திற்கு சாத்தியம் உள்ளதாக, அரசிடம் தெரிவித்தது.

குன்றின் மேற்கில், செங்கல்பட்டு சாலை அடிவார பகுதியிலிருந்து 'ரோப் கார்' இயக்க, தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்க, மண் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

துவக்கத்தில், இத்திட்டத்திற்கு 15 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. சில ஆண்டுகள் தாமதம் காரணமாக, தற்போது 19.50 கோடி ரூபாய் மதிப்பிற்கு உயர்த்தி, அரசிடம் பரிந்துரைக்கப்பட்டது.

தனியார் நிறுவனம், ஒரு மணி நேரத்தில் 400 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைத்து, ஐந்து ஆண்டுகள் இயக்கி பராமரிப்பதாக, இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அதற்கான வடிவமைப்பு, தொழில்நுட்பம், இயக்கம் ஆகிய திறன்கள், முன் அனுபவம், நிதித்திறன் வாய்ந்த, ஆர்வம் உள்ள இந்திய, சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச நிறுவன ஒப்பந்தத்தில் உள்ள இந்திய நிறுவனங்கள் ஆகியவற்றை, ஒப்பந்தத்திற்கு வரவேற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை தற்போது அறிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us