/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொல்லம்பாக்கத்தில் வடிகால்வாய் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை
/
கொல்லம்பாக்கத்தில் வடிகால்வாய் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை
கொல்லம்பாக்கத்தில் வடிகால்வாய் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை
கொல்லம்பாக்கத்தில் வடிகால்வாய் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை
ADDED : ஏப் 23, 2025 02:09 AM

சித்தாமூர்:கொல்லம்பாக்கம் கிராமத்தில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுப்பதால், வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே நெட்ரம்பாக்கம் ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாக்கம் கிராமத்திலுள்ள அண்ணா தெருவில் வடிகால்வாய் வசதி இல்லாததால், தெரு குழாய்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் தேங்குகிறது. இதனால், நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
மேலும், சாலை ஓரத்தில் தேங்கும் தண்ணீரில் இருந்து அதிக அளவில் கொசு உற்பத்தியாவதால், இரவு நேரத்தில் பொதுமக்கள் கொசுத் தொல்லையால் அவதிப்படுகின்றனர்.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கொல்லம்பாக்கத்தில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.