sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பூண்டியில் துணை சுகாதார நிலையம் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை

/

பூண்டியில் துணை சுகாதார நிலையம் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை

பூண்டியில் துணை சுகாதார நிலையம் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை

பூண்டியில் துணை சுகாதார நிலையம் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை


ADDED : டிச 14, 2024 07:09 PM

Google News

ADDED : டிச 14, 2024 07:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் கேளம்பாக்கம், செம்பாக்கம், மானாமதி, சிறுங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தோர், இப்பகுதிகளில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில், பூண்டி உட்பட ராயமங்கலம், எடர்குன்றம் உள்ளிட்ட கிராமங்களுக்கு, போதிய அளவு போக்குவரத்து வசதி இல்லை.

இப்பகுதியைச் சேர்ந்தவர்கள், மேற்கண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது.

எனவே, பூண்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பூண்டி கிராமவாசிகள் கூறியதாவது:

பூண்டி உள்ளிட்ட கிராமங்களில், 2,000க்கும் அதிகமானோர் வசித்து வருகிறோம். மருத்துவ தேவைகளுக்காக சிறுங்குன்றம், மானாமதி அல்லது செம்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் போது, போக்குவரத்து வசதி சரிவர இல்லாததால், சிரமம் ஏற்படுகிறது.

எனவே, பூண்டி பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைத்தால், எங்களுக்கும், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us