/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுதாமூரில் பயணியர் நிழற்குடை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
/
சிறுதாமூரில் பயணியர் நிழற்குடை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
சிறுதாமூரில் பயணியர் நிழற்குடை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
சிறுதாமூரில் பயணியர் நிழற்குடை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
ADDED : ஏப் 03, 2025 02:18 AM

அச்சிறுபாக்கம்:சிறுதாமூர் கூட்டு சாலையில், பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைக்கப்படாததால், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஒரத்தி- - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து சிறுதாமூர் ஊராட்சிக்கு செல்லும் சாலை உள்ளது.
அந்த கூட்டுச்சாலைப் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
அங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் பயன்பெற்று வந்தனர்.
தற்போது, உரிய பராமரிப்பின்றி, விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
அதனால், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
நிழற்குடையை சீரமைக்க வேண்டி, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளுக்கு இது குறித்து புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பழுதடைந்துள்ள நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி, புதிதாக கட்டித்தர ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.