sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெரிய கயப்பாக்கம் குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க கிராமத்தினர் கோரிக்கை

/

பெரிய கயப்பாக்கம் குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க கிராமத்தினர் கோரிக்கை

பெரிய கயப்பாக்கம் குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க கிராமத்தினர் கோரிக்கை

பெரிய கயப்பாக்கம் குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க கிராமத்தினர் கோரிக்கை


ADDED : ஏப் 29, 2025 12:27 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்,பெரியகயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

சித்தாமூர் அருகே பெரிய கயப்பாக்கம் காலனி பகுதியில், 170க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஏரிக்கு நடுவே உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, தினமும் குழாய்கள் வாயிலாக, கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த தண்ணீரை குடிநீராகவும், துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும், பாத்திரங்கள் சுத்தம் செய்வது போன்ற வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குடிநீர் கிணற்றில் அமைக்கப்பட்டு இருந்த மேல்தளம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடிந்து, கிணற்றில் விழுத்ததால், கிணறு தற்போது திறந்த நிலையில் காணப்படுகிறது.

இதனால், குடிநீர் கிணறு பாசி படிந்து காணப்படுகிறது. மேலும், குடிநீர் கிணறு குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ., தொலைவில் ஏரி நடுவே உள்ளதால், கிணற்றில் உயிரினங்கள் இறந்தால் கூட கண்டறிய முடியாத நிலை உள்ளது.

எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து, குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us