sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'மினி டேங்க்'கை செயல்படுத்த கிராம மக்கள் எதிர்பார்ப்பு

/

'மினி டேங்க்'கை செயல்படுத்த கிராம மக்கள் எதிர்பார்ப்பு

'மினி டேங்க்'கை செயல்படுத்த கிராம மக்கள் எதிர்பார்ப்பு

'மினி டேங்க்'கை செயல்படுத்த கிராம மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 09, 2025 09:05 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 09:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:நீலமங்கலம் கிராமத்தில், செயல்படாமல் உள்ள,'மினி டேங்க்' எனும் சிறு தண்ணீர் தொட்டியை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவுஞ்சூர் அருகே நீலமங்கலம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கிராம மக்களுக்கு தினமும் குழாய்கள் வாயிலாக, குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கூடுதல் நீராதாரமாக, குடியிருப்பு பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவில், சில மாதங்களுக்கு முன் 'மினி டேங்க்' அமைக்கப்பட்டது.

அதில், மின் மோட்டார் வாயிலாக தண்ணீர் ஏற்றி துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களாக, தண்ணீர் ஏற்றும் மின் மோட்டாரின் மீட்டர் பெட்டி பூட்டப்பட்டு உள்ளதால், தண்ணீர் ஏற்றாமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கிராமத்தினர் தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம், மினி டேங்க்கை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us