/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுதாமூர் பயணியர் நிழற்குடை சீரமைக்க கிராமவாசிகள் கோரிக்கை
/
சிறுதாமூர் பயணியர் நிழற்குடை சீரமைக்க கிராமவாசிகள் கோரிக்கை
சிறுதாமூர் பயணியர் நிழற்குடை சீரமைக்க கிராமவாசிகள் கோரிக்கை
சிறுதாமூர் பயணியர் நிழற்குடை சீரமைக்க கிராமவாசிகள் கோரிக்கை
ADDED : டிச 23, 2024 11:51 PM

அச்சிறுபாக்கம், சிறுதாமூர் கூட்டு சாலையில், பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைக்கப்படாததால், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஒரத்தி- - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, சிறுதாமூர் ஊராட்சிக்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த கூட்டுச்சாலைப் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், பேருந்து பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
இங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு பணிக்குச் செல்வோர் நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, நிழற்குடை உரிய பராமரிப்பின்றி விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்துள்ளது. துருப்பிடித்த நிலையில் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
நிழற்குடையை சீரமைக்க வேண்டிய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, இதுகுறித்து புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பழுதடைந்துள்ள நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி, புதிதாக கட்டித்தர துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.