/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமுதாய நலக்கூடத்தில் காவல் நிலையம் விழா நடத்த முடியாமல் கிராமத்தினர் அவதி
/
சமுதாய நலக்கூடத்தில் காவல் நிலையம் விழா நடத்த முடியாமல் கிராமத்தினர் அவதி
சமுதாய நலக்கூடத்தில் காவல் நிலையம் விழா நடத்த முடியாமல் கிராமத்தினர் அவதி
சமுதாய நலக்கூடத்தில் காவல் நிலையம் விழா நடத்த முடியாமல் கிராமத்தினர் அவதி
ADDED : மே 30, 2025 11:13 PM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், காயார் கிராமத்தில், 2015ம் ஆண்டு புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இக்காவல் நிலைய எல்லையில் காயார், வெண்பேடு, பனங்காட்டுப்பாக்கம், கீரப்பாக்கம் உள்ளிட்ட, 27 கிராமங்கள் அடங்கியுள்ளன.
ஆனால், இந்த காவல் நிலையத்திற்கு தனியாக கட்டடம் அமைக்காததால், சமுதாய நலக்கூடத்தில் கடந்த 9 ஆண்டுகளாக இடப்பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருகிறது.
போலீஸ் குடியிருப்பு போன்ற வசதிகளும் இல்லாததால், போலீசார் பல கி.மீ. தொலைவில் உள்ள வீடுகளுக்குச் சென்று திரும்பும் நிலை உள்ளது.
இதனால், காவல் நிலைய பணிகள் பாதிக்கப்படுவதுடன், போலீசாருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து, காயார் கிராமத்தினர் கூறியதாவது:
காயார் கிராம மக்களின் பயன்பாட்டுக்காக சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், ஒன்பது ஆண்டுகளாக மேற்கண்ட கட்டடத்தில், காவல் நிலையம் இயங்கி வருகிறது.
இதனால், கிராம மக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த, 15 கி.மீ., தொலைவில் உள்ள திருப்போரூர், கண்டிகை, கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மழைக்காலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கவும் முடியவில்லை. காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டினால், இந்த சமுதாய நலக்கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்த வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.