sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.50 கோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற கிராமத்தினர்

/

ரூ.50 கோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற கிராமத்தினர்

ரூ.50 கோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற கிராமத்தினர்

ரூ.50 கோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற கிராமத்தினர்


ADDED : ஏப் 23, 2025 02:15 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:கேளம்பாக்கம் அருகே தாழம்பூர் ஊராட்சி உள்ளது. நேற்று இங்கு, அரசுக்குச் சொந்தமான 3.14 ஏக்கர் இடத்தை, பெண் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

அந்த இடத்தில், அவரவருக்கு ஏற்றார் போல் இடத்தை மடக்கும் முயற்சியில் இறங்கினர்.

அந்நேரத்தில், ரோந்து பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் சென்று விசாரித்த போது, அப்பெண் ஆக்கிரமித்துள்ள இடத்தில், தங்களுக்கு தலா 2 சென்ட் இடம் வழங்கும்படி கூறியுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வருவாய்த் துறைக்கும், தாழம்பூர் ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் வந்த பின், அங்கு குவிந்திருந்த மக்களை போலீசார் வெளியேற்றினர்.

பின், முதற்கட்டமாக வருவாய்த்துறை அதிகாரிகள், அந்த இடத்தின் நுழைவு கேட்டை மூடி, சங்கிலியால் பூட்டு போட்டனர்.

அதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், அருகே உள்ள தாழம்பூர் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர்.

வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு, மேற்கண்ட இடத்தில் தலா 2 சென்ட் இடம் வழங்க வலியுறுத்தினர். ஒரு மணி நேரம் காத்திருந்து, பிறகு அங்கிருந்து கலைந்தனர். இந்த இடத்தின் மதிப்பு, 50 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us