sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'வாஸ்போ' செஸ் போட்டி துவக்கம் 145 கல்லுாரி மாணவியர் உற்சாகம்

/

'வாஸ்போ' செஸ் போட்டி துவக்கம் 145 கல்லுாரி மாணவியர் உற்சாகம்

'வாஸ்போ' செஸ் போட்டி துவக்கம் 145 கல்லுாரி மாணவியர் உற்சாகம்

'வாஸ்போ' செஸ் போட்டி துவக்கம் 145 கல்லுாரி மாணவியர் உற்சாகம்


ADDED : பிப் 18, 2025 11:53 PM

Google News

ADDED : பிப் 18, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லுாரி சார்பில், 'வாஸ்போ' என்ற தலைப்பில், மாநில செஸ் போட்டி, நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் துவங்கியது.

இதில், பள்ளி அளவில், 15, 18 வயது பிரிவுகளும், கல்லுாரி பிரிவினருக்கு தனியாகவும் போட்டிகள் நடக்கின்றன.

போட்டியில், முதல் பரிசாக, 20,000 ரூபாயும், இரண்டாம் பரிசு, 15,000, மூன்றாம் பரிசு, 10,000 வழங்கப்படுகின்றன. முதல் பத்து நிலை வீராங்கனையருக்கும், ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

முதல் நாளான நேற்று காலை, கல்லுாரி மாணவியருக்கான போட்டிகள் மட்டும் துவங்கின. போட்டியில், 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து, 145 மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.

'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில், ஆறு சுற்றுகள் வீதம் போட்டிகள் நடக்கின்றன. போட்டியை, கல்லுாரியின் முதல்வர் அர்ச்சனா பிரசாத் மற்றும் உடற்கல்வியியல் இயக்குநர் அமுதா ஆகியோர் துவங்கி வைத்தனர். இன்று பள்ளிகளுக்கு இடையிலான போட்டியும் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us