sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாலாற்று குழாய் உடைந்து செங்கையில் வீணான குடிநீர்

/

பாலாற்று குழாய் உடைந்து செங்கையில் வீணான குடிநீர்

பாலாற்று குழாய் உடைந்து செங்கையில் வீணான குடிநீர்

பாலாற்று குழாய் உடைந்து செங்கையில் வீணான குடிநீர்


ADDED : அக் 15, 2024 02:08 AM

Google News

ADDED : அக் 15, 2024 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், அக். 15--

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளதையடுத்து, தமிழக அரசு சார்பில், பேரிடர் மீட்பு குழுவினர், நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திம்மாவரம் நீஞ்சல் மதகு பகுதியில், நேற்று மதியம் ஆய்வு செய்ய இருந்தனர்.

இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மதகு பகுதிக்கு அதிகாரிகள் சென்று வர வசதியாக, நேற்று காலை பொக்லைன் இயந்திரம் வாயிலாக மண் எடுக்கப்பட்டது.

அப்போது, எதிர்பாராதவிதமாக, அந்த பகுதியில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த, செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் பாலாற்று குடிநீர் குழாய் இணைப்பு உடைந்து, பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறி வீணானது.

இது குறித்து, திம்மாவரம் ஊராட்சி நிர்வாகத்தினர், செங்கல்பட்டு நகராட்சி குடிநீர் வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, மோட்டாரை நிறுத்தினர். அதன் பின், உடைந்த குழாய் இணைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us