sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செய்யூர் பகுதியில் தர்பூசணி சாகுபடி பணி தீவிரம்

/

செய்யூர் பகுதியில் தர்பூசணி சாகுபடி பணி தீவிரம்

செய்யூர் பகுதியில் தர்பூசணி சாகுபடி பணி தீவிரம்

செய்யூர் பகுதியில் தர்பூசணி சாகுபடி பணி தீவிரம்


ADDED : பிப் 10, 2025 11:50 PM

Google News

ADDED : பிப் 10, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகள் உள்ளது.

கிட்டத்தட்ட 30,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தைக் கொண்டுள்ளது. ஏரி, ஆறு, குளம், கிணறு, ஆழ்துளைகிணறு போன்ற நீர் ஆதாரங்கள் மூலமாக நெல், மணிலா, தர்பூசணி, கரும்பு ,எள், உளுந்து, ஆகியவை பருவத்திற்கு ஏற்றது போல பயிரிடப்படுகின்றன.

செய்யூர் பகுதியில் அதிகபடியாக நெல், மணிலா மற்றும் தர்பூசணி விவசாயம் செய்யப்படுகிறது.

டிச.,ஜன., பிப், மாதத்தில் பயிரிடப்படும் தர்பூசணி செடிகள் ஏப்ரல்,மே,ஜுன் மாதங்களில் அறுவடைக்கு தயாராகின்றன.

நாம்தாரி, விஷால், டிராகன், என்.எஸ் 295 உள்ளிட்ட பல்வேறு வகையான தர்பூசணி ரகங்களை விவசாயிகள் விளைவிக்கின்றனர்.இந்த பழங்கள் சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. நல்ல சீசன் காலங்களில் அதிகபட்சமாக ஒரு டன் 17,000 முதல் 21 ,000 ரூபாய் வரை நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

செங்கை முதலிடம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு 51,830 ஏக்கர் பரப்பளவில் 6.19 லட்சம் டன் தர்பூசணி பழங்கள் சாகுபடி செய்யப்பட்டன. இதில் செங்கல்பட்டு மாவட்டம் 17,297 ஏக்கர் பரப்பளவில் முதலிடமும், விழுப்புரம் இரண்டாவது இடத்திலும் , திருவள்ளூர் மூன்றாவது இடத்திலும் , திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இருந்தன.செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிரிடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டும் தர்பூசணி பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.








      Dinamalar
      Follow us