/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தமிழகம் வந்தது கிருஷ்ணா நீர் பூ துாவி வரவேற்பு
/
தமிழகம் வந்தது கிருஷ்ணா நீர் பூ துாவி வரவேற்பு
ADDED : செப் 24, 2024 04:49 AM
திருவள்ளூர்: ஆந்திர மாநிலம், கண்டலேறு அணைக்கட்டில், கடந்த 19ம் தேதி திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், நேற்று காலை 9:00 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை அடைந்தது.
ராப்பூர், வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியே, 152 கி.மீ., துாரம் சாய்கங்கை கால்வாயில் பயணித்து, ஊத்துக்கோட்டையை அடைந்தது.
கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் ஜானகி மலர் துாவி வரவேற்றனர்.
நேற்று மாலை 3:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 195 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நீர், இன்று காலை பூண்டி நீர்த்தேக்கத்தை அடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.