sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நாங்களத்துார் கொள்முதல் நிலையத்தில் நனைந்து நாசமான நெல் மூட்டைகள்

/

நாங்களத்துார் கொள்முதல் நிலையத்தில் நனைந்து நாசமான நெல் மூட்டைகள்

நாங்களத்துார் கொள்முதல் நிலையத்தில் நனைந்து நாசமான நெல் மூட்டைகள்

நாங்களத்துார் கொள்முதல் நிலையத்தில் நனைந்து நாசமான நெல் மூட்டைகள்


ADDED : ஏப் 05, 2025 01:30 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:நாங்களத்துார் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள், கோடை மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில், 84 ஊராட்சிகள் உள்ளன.

இப்பகுதி, 30,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தைக் கொண்டுள்ளது. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழில்.

அதிகப்படியாக சம்பா பருவத்தில், நெல் மற்றும் மணிலா விவசாயம் செய்யப்படுகிறது.

சம்பா பருவத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பயிரிடப்பட்ட நெல், விளைந்து அறுடைக்கு தயாராகி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய சித்தாமூர் ஒன்றியத்தில் 19 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.

இதில், நாங்களத்துார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 2,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக செய்யூர் பகுதியில் பெய்து வரும் கோடை மழையால், தார்ப்பாய் பாதுகாப்பு இல்லாமல் தாழ்வான பகுதியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள், மழைநீரில் நனைந்து துர்நாற்றம் வீசுகிறது.

அடுத்த சில நாட்களில் அதே இடத்தில் வைக்கப்பட்டு இருந்தால், மூட்டைகளில் உள்ள நெல் முளைக்கும் சூழல் உள்ளது.

எனவே, நுகர்பொருள் வாணிப கழக துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை, உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us