sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தறிகெட்டு ஓடிய கார் மோதி கணவர் கண்முன் மனைவி பலி

/

தறிகெட்டு ஓடிய கார் மோதி கணவர் கண்முன் மனைவி பலி

தறிகெட்டு ஓடிய கார் மோதி கணவர் கண்முன் மனைவி பலி

தறிகெட்டு ஓடிய கார் மோதி கணவர் கண்முன் மனைவி பலி


ADDED : ஜன 04, 2024 09:28 PM

Google News

ADDED : ஜன 04, 2024 09:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநீர்மலை:பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, கிழக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்; பெட்டி கடை வைத்துள்ளார். இவரது மனைவி அகிலா, 43.

நேற்று காலை தம்பதி, கடையை திறக்க அவ் வழியே நடந்து சென்றனர்.

அப்போது, தறிகெட்டு அதிவேகமாக வந்த 'ஹூண்டாய் கிரிட்டா' கார், அங்கிருந்த ஒரு வீட்டு சுற்றுச்சுவர் மற்றும் அகிலா மீது பயங்கரமாக மோதியது.

இதில் அகிலா துாக்கி வீசப்பட்டு, கணவர் கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய கார், பள்ளத்தில் சிக்கியது. கார் ஓட்டுனரை அங்கிருந்தோர் பிடித்து, தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், திருநீர்மலையைச் சேர்ந்த அஜ்மல், 22, என்பதும், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.

இதுகுறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us