/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு
/
கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு
ADDED : பிப் 22, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முருக்கங்காடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹிமான், 90. இவர், வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து, கணவர் இறந்த செய்தியை அறிந்த அவரது மனைவி ஜமால் பிவி, 70, அடுத்த சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்தார்.
அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, வயதான தம்பதி ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.