sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பொற்பனங்கரணையில் பஸ் நிழற்குடை அமைக்கப்படுமா?

/

பொற்பனங்கரணையில் பஸ் நிழற்குடை அமைக்கப்படுமா?

பொற்பனங்கரணையில் பஸ் நிழற்குடை அமைக்கப்படுமா?

பொற்பனங்கரணையில் பஸ் நிழற்குடை அமைக்கப்படுமா?


ADDED : ஏப் 29, 2025 12:27 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்,

பொற்பனங்கரணை ஊராட்சியில், பயன்பாடின்றி இருந்த பயணியர் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.

அச்சிறுபாக்கம் அடுத்த பொற்பனங்கரணை ஊராட்சியில், 200 குடும்பங்கள் வசிக்கின்றன.

அங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்வோர் பயன்பெறும் வகையில், ஒரத்தி- - எலப்பாக்கம் செல்லும் சாலையில், 20 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை அமைக்கப்பட்டது.

உரிய பராமரிப்பின்றி இருப்பதால், பொதுமக்கள் இதை பயன்படுத்துவதில்லை.

வெயில், மழையில் வெளியே நின்று பேருந்து பிடித்து சென்று வந்தனர்.

நிழற்குடையை சீரமைக்க வேண்டிய ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளுக்கு இதுகுறித்து புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, கடந்த மாதம், பயன்பாடின்றி இருந்த பயணியர் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.

எனவே, அப்பகுதியில் புதிதாக நிழற்குடை அமைக்க ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.






      Dinamalar
      Follow us