/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிதாக சமுதாய கூடம் சித்தாமூரில் அமையுமா?
/
புதிதாக சமுதாய கூடம் சித்தாமூரில் அமையுமா?
ADDED : அக் 09, 2024 12:33 AM

சித்தாமூர்:சித்தாமூர் ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி அலுவலகம் அருகே சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.
சித்தாமூர், கன்னிமங்கலம், வாலோடை உள்ளிட்ட கிராமங்களில் வசிப்போர், தங்கள் இல்ல சுபநிகழ்ச்சிகளை சமுதாய கூடத்தில் நடத்தி வந்தனர். சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் நாளடைவில் சமுதாயக்கூடம் பழுதடைந்தது.
மேலும், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி இல்லாததால், சமுதாய கூடத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதை பொதுமக்கள் தவிர்த்து, தனியார் மண்டபங்களில் அதிக செலவு செய்து சுபநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய சமுதாய கூடத்தை அகற்றி, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.