/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்லிகுப்பத்தில் மின் கட்டணம் செலுத்த அலுவலகம் அமைக்கப்படுமா?
/
நெல்லிகுப்பத்தில் மின் கட்டணம் செலுத்த அலுவலகம் அமைக்கப்படுமா?
நெல்லிகுப்பத்தில் மின் கட்டணம் செலுத்த அலுவலகம் அமைக்கப்படுமா?
நெல்லிகுப்பத்தில் மின் கட்டணம் செலுத்த அலுவலகம் அமைக்கப்படுமா?
ADDED : ஜன 23, 2025 07:45 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் நெல்லிக்குப்பம் ஊராட்சி உள்ளது. இதனருகே அம்மாபேட்டை, கீழூர், தர்மாபுரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன.
இப்பகுதி மக்கள், மின் கட்டணம் செலுத்த, இரண்டு பேருந்துகள் பிடித்து, 12 கி.மீ., வரை பயணம் செய்து, திருப்போரூர் மின்வாரிய அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை உள்ளது.
வளர்ந்து வரும் பகுதியான நெல்லிக்குப்பம், அம்மாபேட்டை கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் ஏற்படும் மின் பழுதுகளை, துணை மின்நிலைய பணியாளர்களே கவனிக்கின்றனர்.
இந்நிலையில், இதே இடத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக, மின் துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தையும் ஏற்படுத்தினால், இப்பகுதியினர் பயனடைவர்.
அதற்கான அலுவலகம் இல்லாததால் மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்பு விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கள் கேட்டல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு மக்கள் திருப்போரூர் வரவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வீண் அலைச்சலும், செலவும் அதிகரிக்கிறது.
இதுதொடர்பாக மக்கள் பல முறை மின்துறைக்கு கோரிக்கையும் வைத்துள்ளனர்.
எனவே, மின் துறையினர், நெல்லிக்குப்பத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான வசதியை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

