sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நெற்குணப்பட்டு ஊராட்சியில் அங்கன்வாடி அமைக்கப்படுமா?

/

நெற்குணப்பட்டு ஊராட்சியில் அங்கன்வாடி அமைக்கப்படுமா?

நெற்குணப்பட்டு ஊராட்சியில் அங்கன்வாடி அமைக்கப்படுமா?

நெற்குணப்பட்டு ஊராட்சியில் அங்கன்வாடி அமைக்கப்படுமா?


ADDED : அக் 09, 2024 10:27 PM

Google News

ADDED : அக் 09, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார்:கூவத்துார் அடுத்த நெற்குணப்பட்டு கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில், 15 குழந்தைகள் படிக்கின்றனர்.

மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.

பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், பராமரிப்பு இன்றி நாளடைவில் சேதமடைந்தது,

முன்னெச்சரிக்கையாக, சில மாதங்களுக்கு முன், ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள கிராம சேவை மைய கட்டடத்திற்கு, அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டு தற்போது செயல்படுகிறது.

கிராம சேவை மைய கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாமலும், கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, குழந்தைகளின் நலன் கருதி, புதிய அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us