sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்படுமா?

/

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்படுமா?

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்படுமா?

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்படுமா?


ADDED : பிப் 16, 2025 02:36 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், சுற்றுலா பயணியரின் வசதிக்காக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

மதுராந்தகம் அருகே, உலக புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. சரணாலயம் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்ட இந்த ஏரி, முழு கொள்ளளவு நிரம்பியது.

இலங்கை, சைபீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தைகுத்தி நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான் மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட, பல்வேறு பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன.

இதன்படி, 25க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்துள்ளன. 30,000க்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து வருகின்றன.

இந்த பறவைகள் சரணாலயத்திற்கு, அதிக அளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். நவீன கழிப்பறையும் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே, பயணியர் வசதிக்காக கூடுதலாக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.

மேலும், சுற்றுலா பயணியர் வசதிக்காக, ஆவின் பாலகம் அமைக்கவும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us