sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை புறவழிச்சாலையில் நிழற்குடை அமைக்கப்படுமா?

/

செங்கை புறவழிச்சாலையில் நிழற்குடை அமைக்கப்படுமா?

செங்கை புறவழிச்சாலையில் நிழற்குடை அமைக்கப்படுமா?

செங்கை புறவழிச்சாலையில் நிழற்குடை அமைக்கப்படுமா?


ADDED : அக் 01, 2024 12:23 AM

Google News

ADDED : அக் 01, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, - செங்கல்பட்டு புறவழிச்சாலையில், மேம்பாலம் அருகில், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன.

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. புறவழிச் சாலையில், பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன.

ஆனால், சாலையின் இருபுறமும் நிழற்குடை இல்லாததால், வெயில், மழையில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுமட்டும் இன்றி, இரவு நேரங்களில், பெண்கள் அச்சத்துடன் நீண்டநேரம் பேருந்திற்காக, காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

இதனை தவிர்க்க, பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், பயணியர் நிழற்குடை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பயணியர் நலன்கருதி, நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us