sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேடந்தாங்கல் ஏரி நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்படுமா?

/

வேடந்தாங்கல் ஏரி நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்படுமா?

வேடந்தாங்கல் ஏரி நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்படுமா?

வேடந்தாங்கல் ஏரி நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்படுமா?


ADDED : அக் 18, 2024 01:11 AM

Google News

ADDED : அக் 18, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்டதாகும்.

தற்போது, 9 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. அக்டோபர் மாதத்தின் இறுதியில், பறவைகள் வரத்து அதிகரித்து, சீசன் துவங்க உள்ளது.

இதில், வேடந்தாங்கல் ஏரிக்கு, வளையப்புத்துார் ஏரியிலிருந்து நீர்வரத்து கால்வாய் வாயிலாக வரும் நீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, வளையப்புத்துார் ஏரி, முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

இன்னும், ஒரு அடி தண்ணீர் நிரம்பினால், ஏரியிலிருந்து கலங்கல் வழியாக, உபரி நீர் வெளியேறும் வகையில் நீர் நிரம்பி உள்ளது.

எனவே, வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருவதால், வளையப்புத்துார் ஏரியிலிருந்து, வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் செல்லும் கால்வாயை துார்வாரி சீரமைக்க, வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us