/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒரே இடத்தில் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிப்பு ரேஷன் கடை பெண் விற்பனையாளர்கள் அவதி
/
ஒரே இடத்தில் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிப்பு ரேஷன் கடை பெண் விற்பனையாளர்கள் அவதி
ஒரே இடத்தில் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிப்பு ரேஷன் கடை பெண் விற்பனையாளர்கள் அவதி
ஒரே இடத்தில் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிப்பு ரேஷன் கடை பெண் விற்பனையாளர்கள் அவதி
ADDED : ஏப் 02, 2025 09:58 PM
செய்யூர்:செய்யூர் பகுதியில் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும், ஒரே இடத்தில் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிப்பதால், வாங்கிச் செல்ல பெண் விற்பனையாளர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
செய்யூர் பகுதியில் 176 நியாய விலைக் கடைகள் செயல்படுகின்றன.
இவற்றின் வாயிலாக அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகளாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க, நியாய விலைக் கடைகளுக்கு நேரடியாக லாரிகளில் கொண்டு வந்து வினியோகம் செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களாக, பொதுவான ஒரு இடத்தில் லாரி நிறுத்தப்பட்டு மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதனால், விற்பனையாளர்கள் நேரடியாக அங்கு வந்து, மண்ணெண்ணெய் வாங்கிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், செய்யூர் பகுதிகளில் செயல்படும் நியாய விலை கடைகளுக்கு வரும் மண்ணெண்ணெய் லாரி சித்தாமூர், சோத்துப்பாக்கம் போன்ற பகுதிகளில் நிறுத்தப்படுவதால், பவுஞ்சூர், கூவத்துார் பகுதியில் உள்ள விற்பனையாளர்கள் நீண்ட துாரம் சென்று வாங்கி வரவேண்டி உள்ளது. இதனால், பெண் விற்பனையாளர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, பொது விநியோக திட்ட அதிகாரிகள், நியாய விலைக் கடைகளுக்கு நேரடியாக லாரிகளில் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

