/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மகளிர் சுகாதார வளாகம் சீரமைப்பு பணி விறுவிறு
/
மகளிர் சுகாதார வளாகம் சீரமைப்பு பணி விறுவிறு
ADDED : மார் 18, 2024 03:13 AM

அச்சிறுபாக்கம், : அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட கரசங்கால் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே, பெண்கள் பயன்பாட்டிற்காக, 10 ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
இந்த வளாகத்திற்குள் கழிப்பறை, குளியலறை, மின் மோட்டாருடன் கூடிய நீரேற்று அறை, தண்ணீர் தொட்டி மற்றும் துணி துவைக்கும் கல் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
தற்போது, அந்த வளாகம் சீரழிந்து, பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதனால், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்குமிடமாக உள்ளது.
மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

