/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பெண்கள் கழிப்பறை கதவுகள் மாயம்
/
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பெண்கள் கழிப்பறை கதவுகள் மாயம்
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பெண்கள் கழிப்பறை கதவுகள் மாயம்
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பெண்கள் கழிப்பறை கதவுகள் மாயம்
ADDED : ஜன 22, 2025 12:11 AM

மதுராந்தகம்,
மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், பெண்கள் கழிப்பறையில் கதவுகள் இல்லாததால், பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.
மதுராந்தகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கீழ், 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயங்குகின்றன.
மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சூணாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழி நாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் 5,000க்கும் மேற்பட்ட பயணியர், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்து பயணியரின் நலன் கருதி, தற்காலிக பயன்பாட்டிற்காக இங்கு, பெண்கள் கழிப்பறை மற்றும் ஆண்கள் கழிப்பறை அமைக்கப்பட்டது.
இதில், பெண்கள் கழிப்பறையில், இரண்டு கழிப்பறையின் கதவுகள் மாயமாகி உள்ளன.
இதனால், பெண் பயணியர் கழிப்பறையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், அவசரத்திற்கு கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிப்பறைகளுக்கு கதவுகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.