sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருப்போரூர் சமுதாய கூடம் மேம்படுத்தும் பணி தீவிரம்

/

திருப்போரூர் சமுதாய கூடம் மேம்படுத்தும் பணி தீவிரம்

திருப்போரூர் சமுதாய கூடம் மேம்படுத்தும் பணி தீவிரம்

திருப்போரூர் சமுதாய கூடம் மேம்படுத்தும் பணி தீவிரம்


ADDED : ஜன 24, 2025 12:40 AM

Google News

ADDED : ஜன 24, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், திருப்போரூர் பேரூராட்சி, 8வது வார்டில், ஓ.எம்.ஆர், சாலையை ஒட்டி சமுதாய நலக்கூடம் உள்ளது.

இதில், திருப்போரூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தண்டலம், ஆலத்துார், சிறுதாவூர் உள்ளிட்ட கிராம மக்கள், திருமணம், சங்க கூட்டம் என, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த சமுதாய நலக்கூடம் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, பொலிவின்றி சிதிலமடைந்து காணப்பட்டது. மேலும், போதிய இடவசதியும் இல்லாமல் அப்பகுதிவாசிகள் சிரமப்பட்டனர். எனவே, சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து, கூடுதல் கட்டடம் கட்டி மேம்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து மேம்படுத்த, 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து மேம்படுத்துவதற்கான பணிகள் கடந்த ஆண்டு பிப்., மாதம் துவங்கப்பட்டது.

தற்போது கட்டுமான பணிகள் 70 சதவீதம் முடிந்து தீவிரமாக நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us