ADDED : டிச 16, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,:சேலையூர் அடுத்த மாடம்பாக்கம், சுதர்சன் நகரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன், 50; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் மாடம்பாக்கம் பிரதான சாலையில் சென்றார்.
அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவசுப்பிரணியன், குரோம்பேட்டை அரசு மருத்துவனையில் இறந்தார்.
குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

