ADDED : அக் 01, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர், -திருப்போரூர் பேரூராட்சி, திருவஞ்சாவடி தெருவை சேர்ந்தவர் சங்கரன், 57. கூலித்தொழிலாளி.நேற்று முன்தினம் மாலை, திருப்போரூர் ரவுண்டானா அருகே, சங்கரன் இறந்து கிடப்பதாக, திருப்போரூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில், வயிற்று வலியால் இறந்திருக்கலாம் என தெரிகிறது. எனினும், வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.