/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண் முன்னேற்றத்திற்கு சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
பெண் முன்னேற்றத்திற்கு சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பெண் முன்னேற்றத்திற்கு சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பெண் முன்னேற்றத்திற்கு சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 22, 2025 09:53 PM
செங்கல்பட்டு:பெண்கள் முன்னேற்றத்திற்காக சேவையாற்றியோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு, சுதந்திர தினத்தன்று, தமிழக முதல்வர் விருது வழங்குகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தகுதியான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை புரிந்துவரும் சமூக சேவகர்கள், https;//awards.tn.gov.in என்ற, தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில், கடந்த 12ம் தேதி துவங்கி, வரும் ஜூன் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன், மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு, 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.