sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பதிவு செய்யாமல் குழந்தைகள் இல்லம் இயங்கினால் புகார் அளிக்கலாம்

/

பதிவு செய்யாமல் குழந்தைகள் இல்லம் இயங்கினால் புகார் அளிக்கலாம்

பதிவு செய்யாமல் குழந்தைகள் இல்லம் இயங்கினால் புகார் அளிக்கலாம்

பதிவு செய்யாமல் குழந்தைகள் இல்லம் இயங்கினால் புகார் அளிக்கலாம்


ADDED : ஜூன் 11, 2025 09:12 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பதிவு செய்யாமல் குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டால் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து குழந்தைகள் இல்லங்களும், இளைஞர் நீதி சட்டம் 2015 பிரிவு 41ன்படி, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் பதிவு செய்து இயங்க வேண்டும்.

புதிதாக பதிவு செய்ய வேண்டுமென்றால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை தொடர்பு கொள்ளலாம். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் பதிவு செய்யாமல், குழந்தைகள் இல்லங்கள் இயங்கி வருவது தெரிந்தால், அக்குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கு, ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையாமல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மாவட்டத்தில் பதிவு செய்யாமல் குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டால், அருகில் வசிப்பவர்கள் உடனடியாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் dcpucpt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 63826 12846 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us