/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொங்கல் பரிசு தொகுப்பு இன்று பெற்று கொள்ளலாம்
/
பொங்கல் பரிசு தொகுப்பு இன்று பெற்று கொள்ளலாம்
ADDED : ஜன 24, 2025 07:49 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு இன்று ரேஷன் கார்டுதாரர்கள் வாங்கி கொள்ளலாம் என, மாவட்ட வட்ட வழங்கல் துறையினர் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், 4 லட்சத்து 36 ஆயிரத்து 61 ரேஷன் கார்டு தாரர்கள் உள்ளனர்.
செங்கல்பட்டு அடுத்த, வல்லம் ஊராட்சி, நேருநகர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பை, கலெக்டர் அருண்ராஜ், கடந்த 9ம் தேதி துவக்கிவைத்தார். அதன்பின், மாவட்டத்தில், ஆறு தாலுகாவில். நேற்றுமுன்தினம் வரை, 3 லட்சத்து 58 ஆயிரத்து 962 ரேஷன் கார்டுதாரர்கள், பொங்கல் தொகுப்பு வாங்கி சென்றனர்.
பொங்கல் தொகுப்பு 77 ஆயிரத்து 99 பேர் வங்கவில்லை. இவர்கள், இன்று ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என, மாவட்ட வழங்கல் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

