/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.6 லட்சம் மோசடி வாலிபர் கைது
/
ரூ.6 லட்சம் மோசடி வாலிபர் கைது
ADDED : ஜன 05, 2025 07:57 PM
கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கத்தில் ஸ்ரீராம் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் சுரேஷ், 34, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
சென்னை, முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் சூரிய பிரகாஷ் , 24, என்பவர் எங்களது நிறுவனத்தில் பீல்ட் ஆபீஸராக பணிபுரிந்து வந்தார். இவர் எங்களது வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று, பணம் வசூல் செய்து, அதை அலுவலகத்தில்செலுத்தி வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக, அவர் வசூல் செய்த பணம் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை அலுவலகத்தில் செலுத்தாமல் தலைமறைவாகி விட்டார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரி போலீசார் தலைமறைவாக இருந்த சூரிய பிரகாசை நேற்று கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

