sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிங்கபெருமாள் கோவிலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

/

சிங்கபெருமாள் கோவிலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

சிங்கபெருமாள் கோவிலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

சிங்கபெருமாள் கோவிலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது


ADDED : செப் 19, 2025 10:39 PM

Google News

ADDED : செப் 19, 2025 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில் கஞ்சா விற்ற வாலிபரை, மறைமலை நகர் போலீசார் கைது செய்தனர்.

சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே, கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த நபர் ஒருவர், போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்த போது, 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் சிக்கின.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 26, என தெரிந்தது.

இவர் சிங்கபெருமாள் கோவில், திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகளில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், இவர் மீது வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.

தனுஷை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us