ADDED : நவ 18, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்: மறைமலை நகர் என்.ஹெச் - 2 பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த கடையில் சோதனை செய்த போலீசார், அங்கு விற்பனைக்கு வைத்திருந்த, 6 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.
குட்கா விற்ற, கடையின் உரிமையாளரான முகமது பரிக், 20, என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

