/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகரில் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது
/
மறைமலைநகரில் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது
மறைமலைநகரில் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது
மறைமலைநகரில் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது
ADDED : டிச 22, 2024 08:34 PM
மறைமலைநகர்:மறைமலைநகர் என்.ஹெச்.3 சீவகசிந்தாமணி தெருவைச் சேர்ந்தவர் கோமதி, 76. கடந்த 19ம் தேதி காலை அதே பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, மர்ம நபர்கள் இவரது செயினை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்படி, கோமதி அளித்த புகாரின்படி, சம்பவம் நடந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, மறைமலைநகர் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த தென்பாலை கிராமத்தைச் சேர்ந்த பிரவீன்,24, என்பவரை கைது செய்தனர்.
இவர், கடன் தொல்லை காரணமாக, முதல்முறையாக மறைமலைநகரில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது.
தங்க செயினை பறிமுதல் செய்த போலீசார், பிரவீனை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.