sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது

/

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது


ADDED : பிப் 19, 2025 06:20 PM

Google News

ADDED : பிப் 19, 2025 06:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்ருதீன், 20. செங்கல்பட்டு அருகில், திருப்போரூர் கூட்ரோடு பகுதியில் உள்ள கோழி கடை ஊழியர். தன் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பெண்ணை, திருமணம் செய்வதாக, ஒரு மாதத்திற்கு முன் அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிந்து தேடிவந்த நிலையில், தற்போது அவர்களை கண்டு பிடித்தனர். மாமல்லபுரம் மகளிர் போலீசார், சிறுமியிடம் விசாரித்து, வாக்கு மூலம் பெற்றனர்.

அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம், திருக்கழுக்குன்றம் போலீசார், பக்ருதீனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். சிறை அருகில் சென்றபோது, போலீசாரிடமிருந்து வாலிபர் தப்பினார்.

பின் திருப்போரூர் கூட்ரோடு அருகில், அவர் வேலை செய்த இறைச்சிக்கடை உரிமையாளரிடம், பணம் வாங்க சென்றவரை, மறைந்திருந்த போலீசார் மடக்கி பிடித்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us