/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாம்பு கடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி
/
பாம்பு கடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : அக் 03, 2024 08:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த மேலேரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா, 25. கடந்த 29ம் தேதி இரவு, வீட்டில் துாங்கிக்கொண்டு இருந்த போது, வலது கை விரலில் பாம்பு கடித்தது.
அக்கம் பக்கத்தினர் சூர்யாவை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சூர்யா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.